Saturday, February 21, 2009
மூட நம்பிக்கைகளில் பல வகைகள் உண்டு. குதிரை துறையில் பல வகையான மூட நம்பிக்கைகள் அன்றாடம் கடைப்பிடிக்கப்படும். குதிரை இனப்பெருக்கத்திற்காக எடுத்து வரும்போது , ஒரு குறிப்பிட்ட நபர் கையால் எடுத்து வரப்படும்போது சில காரணங்களால் mating நடக்க வில்லை என்றால், வேறொரு நபர் handle செய்ய அறிவுருத்தப்படுவார். குதிரை சினையா இல்லையா என scan செய்யப்படும் பொது பெண் குதிரையின் வாலை ஒரு குறிப்பிட்ட நபர் பிடிப்பார், scan செய்யப்படும் குதிரைகள் இரண்டு மூன்று தொடர்ச்சியாக சினை இல்லை என்று அறியப்பட்டால் அந்த நபர் மாற்றப்படுவார், பின்னர் வேறொரு நபர் வால் பிடிக்கப்பணிக்கப்படுவார். அந்த நபரின் அதிர்ஷ்டம் தேயும் வரை அவரே தொடருவார். ஒரு குறிப்பிட்ட நபர் வால் பிடிப்பதால் எப்படி குதிர சினை ஆகும் என்ற அறிவுப்பூர்வ மான கேள்வி எல்லாம் கேட்கப்படாது. செட்டிநாடு குதிரைப்பன்னையில் மாதம் ஒரு முறை கணபதி ஹோமம் நடத்தப்படும். செவ்வாய் கிழமைகளில் தான் சாஸ்திரிகள் வந்து ஹோமம் செய்வார்கள் அன்றுதான் மற்ற இடங்களில் பூஜைகள் இருக்காது. அதில் அவர்கள் விடும் பந்தா வேறு எங்களைபோன்றவர்களுக்கு எரிச்சலை உண்டாக்குவதாக அமையும். "மாமா இங்கப்பாருங்கோ பூஜை செஞ்ச நேரம் குட்டிப்போட்டுடுத்து" என பெருமையாக சொல்லிக்கொள்வார்கள், அது இவர்கள் பண்ணிய பூஜையில் குறைபிரசவம் ஆகி ரெண்டு நாள் கழித்து மண்டையை போட்டு விடும் என்பது எங்களுக்குத்தான் தெரியும். நானும் ஒரு விஷயத்தை கவனித்தேன், அவர்கள் வந்து பூஜை செய்து விட்டு சென்றால் ரெண்டு நாளுக்குள் ஒரு குதிரையாவது மண்டையைப்போட்டு விடும்.(இது என்னோட மூட நம்பிக்கை)
Subscribe to:
Comments (Atom)
