Sunday, September 6, 2009


ரேஸ் குதிரைக்கு ரம் குடுப்பாங்கலாமே என்பது பெரும்பாலான நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி. எனக்கு தெரிந்தவரை அப்படி யாரும் கொடுப்பதில்லை. உலகமெங்கும் ரேஸ் குதிரைகளுக்கு ஊக்க மருந்து பரிசோதனை மிக கடுமையாக கடைபிடிக்க படுகிறது. ரேசில் முதல் மூன்று அல்லது ஐந்து இடங்களை பிடிக்கும் குதிரைகளுக்கு அதன் சிறுநீர் அல்லது ரத்த மாதிரி ரேஸ் முடிந்தபின் சேகரிக்கப்பட்டு அதில் ஊக்க மருந்துகள் பயன் படுத்தப்பட்டதார்கான அறிகுறிகள் உள்ளனவா என பரிசோதிக்கப்படுகிறது, இதற்கென்றே பிரத்யேகமான சோதனை சாலைகள் ஒவ்வொரு குதிரை பந்தய மைதானத்திலும் உண்டு மேலும் சில சமயங்களில் மறு பரிசோதனை செய்ய இங்கிலாந்து அல்லது துபாயில் உள்ள சோதனைசாலைகளுக்கு அனுப்பபடுவதுண்டு. மேலும் குதிரை பந்தய மைதானங்களில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் அன்றி மற்றவர்கள் குதிரைகளுக்கு எந்த விதமான மருந்துகளையும் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை. ஆக இதையெல்லாம் மீறி ரம்,விஸ்கி,பிராந்தி கொடுப்பது கடினம்தான். ஒரு முறை நான் குதிரை பண்ணையில் பணிபுரியும்போது பரிசோதனை முயற்சியாக ஒரு குதிரைக்கு ரம் கொடுத்து என்னதான் ஆகிறது என பார்க்க நானும் என்னுடன் பணி புரிந்த எழிலன் என்னும் நண்பரும் முடிவு செய்தோம், பொருளாதார ரீதியாக ரம் கொடுப்பது எங்களுக்கு முடியாத காரியம் என்பதால், உள்ளூரிலேயே கிடைக்கும் பட்டை சாராயம் கொடுக்க முடிவு செய்தோம், அவர் எங்கிருந்தோ மூன்று கிளாஸ் முப்பது ரூபாய்க்கு சாராயம் வாங்கி வந்தார், நாங்கள் அதில் பாதியை முதலில் டியுப் வழியாக அதன் இரைப்பைக்குள் செலுத்தினோம், ஒரு மணி நேரத்தில் மட்டை ஆகி விடும் என்ற எங்கள் நினைப்பை தவிடுபொடியாக்கி சும்மா கன் மாதிரி நிக்குது, திரும்ப மீதி இருந்த சரக்கையும் டியுப் மூலமாக இரைப்பையில் செலுத்தினோம் , கொஞ்சம் கூட அசர வில்லை அந்த குதிரை. அதன் நடத்தையில் ஒரு சிறிய மாற்றம் கூட நாங்கள் காண வில்லை. ரம் கொடுத்தால் என்ன ஆகின்றது எங்கள் ஆராய்ச்சி தோல்வியை தழுவியது. இதன் மூலம் நாங்கள் அறிந்து கொண்டது என்னவென்றால் போதை வேண்டுமென்றால் முறைப்படி ஊறுகாய் அல்லது மிக்சர் தொட்டுக்கொண்டு சோடாவில் கலந்து அடித்தால் தான் அது குதிரையாய் இருந்தாலும் கிக் வரும் என்பதுதான்.


நாளை பார்ப்போம்....குதிரைக்கு கொள்ளு கொடுக்கணும்....

Saturday, September 5, 2009

குதிரை விலை


குதிரையுடைய விலை அதனுடைய அப்பா, அம்மா,சகோதரர்கள்,சகோதரிகள் மற்றும் உறவினர்களின் ரேஸ் வெற்றி மற்றும் எவ்வளவு பணம் ஈட்டியது என்பதை பொறுத்தது. மேலும் அவற்றின் கால்கள்,உடலமைப்பு (இந்தியாவில் சுழி கூட பார்க்கப்பட்ட் பின்னர்தான்)என பல விஷயங்களும் பார்க்கப்பட்டு பின்னரே விலை நிர்ணயிக்கப்படுகிறது. சில குதிரைகள் கோடிகளில் விலை பேசப்படும், சில இலவசமாக கொடுத்தால் கூட எடுக்க ஆள் இருக்காது. அமெரிக்காவின் கெண்டகியில் உள்ள கிங் மாம்போ என்ற ஆண் குதிரை இனபெருக்கத்திற்காக மட்டும் உபயோகபடுத்தப்படுகிறது, ஒரு முறை இனபெருக்கம் செய்து குட்டி போட வைக்க கட்டணம் 2,50,000 அமெரிக்கா டாலர்கள் ஆகும். வருடத்திற்கு 120 முதல் 150 குதிரைகளை இனப்பெருக்கம் செய்யும். துபாய் ரேசிங் கார்னிவல் 2008 -ல் உலக கோப்பையை வென்ற கர்லின் என்ற குதிரை அப்போது அறுபது மில்லியன் டாலருக்கு விலை பேசப்பட்டதாகவும் ஆனால் அதன் உரிமையாளர் விற்க மறுத்து விட்டதாகவும் அப்போது பேசப்பட்டது. கிங் மாம்போ என்ற குதிரையின் விலை தான் அதுவரை மிக அதிகமாக இருந்தது (40 மில்லியன் டாலர், கிட்டத்தட்ட் 200 கோடி), நம் ஊரில் நான் பணியில் இருந்த பொது 2004 ஆம் ஆண்டு சில குதிரை கள் ஒரு கோடிக்கும் மேல் விலைகொடுத்து வாங்கப்பட்டதாக கூறப்பட்டது, நம் ஊரில் வருமான வரிக்கு பயந்து யாரும் உண்மையான விலை சொல்லுவதில்லை. ஆனால் இப்போதும் ஒரு சில குதிரைகளின் குட்டிகள் சராசரியாக முப்பது லட்சத்திற்கும் மேல் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

Thursday, September 3, 2009






குதிரைக்கு எலும்பு முறிவு ஏற்படும்போது அதை சுட்டு கொன்னுடுவீங்கலாமே என்பது பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி , பழைய காலத்தில் சுட்டு க்கொள்வது என்பது நடந்ததுதான் , ஆனால் இப்போது வலி தெரியாமல் கொல்ல எத்தனையோ மருந்துகl வந்து விட்டது . எல்லா விதமான எலும்பு முறிவுகளுக்கு கொல்வது கிடையாது. இந்த படத்தில் உள்ளது போன்ற முறிவுகள் ஏற்படும்போது, குதிரைகளே அந்த காலில் மேலும் கால் ஊன்றி நின்று எலும்பு முறிவை மேலும் அதிகமாக்கி அதனால் ஏற்படும் ரத்த போக்கின் விளைவாக இறந்து போவது உண்டு. என்னதான் அந்த கால்கள் அசையாமல் நகராமல் இருக்க கட்டுக்கள் போட்டாலும் kuthiraikalaal சும்மா இருக்க முடியாது, மேலும் அந்த காயத்தை பெரிதாக்கி மோசமடையுமே தவிர காயம் பட்ட கால்களை மனிதர்கள் போல் ஆடாமல் அசையாமல் வைத்திருக்காது. கருணைக்கொலை செய்வது பற்றி கால்நடை மருத்துவர்கள் மிக அவசரப்பட்டு முடிவு எடுக்கின்றார்கள் என மிருக வதை தடுப்பு ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவது உண்டு, சிறிய வகை எலும்பு முறிவுகளை நான் பலமுறை வெற்றிகரமாக சிகிச்சை அளித்தது உண்டு, ஆனால் படத்தில் இருப்பது போன்ற முறிவுகள் கருணைக்கொலை செய்யப்படுவதுதான் சரியான முடிவு, படத்தில் உள்ள குதிரைக்குட்டி(ஒன்பது மாதங்கள் வயது) மேயும் இடத்தில் வேகமாக ஓடி கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டது, நான் சென்று பார்க்கும் பொது தோல் மட்டும்தான் ஒட்டிக்கொண்டு இருந்தது, எலும்பு நொறுங்கி பொய் இருந்தது. அதிக ரத்த போக்கினால் சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது.