Saturday, January 24, 2009
பீர்ருடைய கிளினிக் மற்றும் பணிசூழலை பார்க்கும் பொது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கு. ஏனென்றால் ஒரு சில நேரங்களில் சில முட்டாள் ஒனர்களிடம் நான் மாட்டிக்கொண்டு முழித்த சம்பவங்கள் எனக்கு நினைவு வருகிறது. ஒரு முறை ஒரு racing filly க்கு colic. அதை சிகிச்சை அளிக்க என்னை அழைத்தார்கள், நானும் சென்று என்னிடம் இருந்த அனைத்து சர்வ ரோக நிவாரநிகளையும் உபயோகப்படுத்தினேன், பின்னரும் கொஞ்சமும் குணமாக வில்லை, rectal exam செய்த போது(nephro-splenic entrapment of intestine) அறுவை சிகிச்சை மூலமே அதை சரி செய்ய முடியும் என தெரிந்து கொண்டேன். பின்னர் நான் அவர்களிடம் அதை எடுத்து கூறினேன், அவர்கள் என்னிடம் அந்த குதிரை urine போகத்தான் கஷ்டப்படுகிறது ஆகவே அதற்கு Lasix கொடுத்தால் சரியாகி விடும் என்றார்கள், நான் அவர்களிடம் அதனால் ஒன்றும் பயனில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்று விட்டேன். ஒரு மணி நேரம் கழித்து திரும்ப அந்த குதிரை எப்படி இருக்கிறது என பார்க்க சென்றேன், அப்போது அந்த குதிரையை ஸ்தபுலுக்கு வெளியே வைத்து ஒரு ஆண் குதிரையை வைத்து covering செய்து கொண்டு இருந்தார்கள், ஆண் குதிரை மேலே ஏறியவுடன் பெண் குதிரை அந்த இடத்திலேயே விழுந்து இறந்து விட்டது. நான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களிடம் விசாரித்தேன், அதற்கு அந்த குதிரை சிறுநீர் போகும் வழியில் அடைத்து உள்ளது, ஆகவே அதை cover செய்தால் அடைப்பு நீங்கி சிறுநீர் போய் விடும் என்று ஒரு அனுபவ சாலி சொன்னார் அதுதான் முயற்சி செய்தோம் ஆனால் குதிரை செத்து விட்டது என்றார்கள். நான் என்னுடைய அறைக்கு வந்து அதை நினைத்து பல முறை சிரித்தேன்.
Friday, January 23, 2009
பீல்ட் மென் சுப்பிரமணி அவருடைய சைக்கிளில் டாக்டர் "கா.சு.மணியன்" என எழுதி வைத்திருப்பார், அதைப்பார்த்தால் பெரிய டாக்டர் க்கு மிக கோபம் வரும். பீல்ட் மென் சித்த மருத்துவத்தில் கொஞ்சம் அனுபவம் உள்ளவர் அதனால், அனுபவ சித்த மருத்துவர்கள் சங்கத்தில் உறுப்பினர், அவர்கள் சங்க கூட்டம் மாதம் ஒரு முறை நடைபெறும், அதற்கு வரும் அழைப்பு கடிதத்தில் அவருடைய பெயருக்கு முன் டாக்டர் என போட்டிருப்பது பெரிய டாக்டரை எரிச்சல் படுத்தும். ஆனால் இதை எல்லாம் பீல்ட் மென் கண்டு கொள்ள மாட்டார். அவருடைய (விதண்டா)வாதம் என்னவென்றால் குதிரைகளுக்கு பெரிய டாக்டர் போல, பண்ணையிலுள்ள மரங்களுக்கெல்லாம் அவர்தான் டாக்டர் ,ஏனென்றால் அவர்தானே உரம், பூச்சி மருந்து கொடுக்கிறார். ஆகவே ரெண்டு பெரும் சமம் என்பது அவர் நினைப்பு.
Saturday, January 10, 2009
pannaiyil ஜால்ரா அடிப்பதற்கு வரைமுறையே இல்லாமல் இருக்கும், hospital assistants ராதா கிருஷ்ணன் மற்றும் அழகிரி இடையே பெரிய போட்டியே நடக்கும், covering நடைபெறும் போது பெரிய டாக்டர் அணிந்து கொள்ளும் arm guard, helmet ஆகியவற்றை அவரிடம் எடுத்து கொடுப்பதற்கு அவர்களிடையே நடைபெறும் போட்டி நகைச்சுவையாக இருக்கும், ராதா கிருஷ்ணன் முன்னாலேயே வந்து விட்டால் டாக்டருக்கு தேவையான சாமான்களை எடுத்து ஒளித்து வைத்து விடுவான், அவன் கையாலேயே கொடுத்தால்தான் ஐயாவின் கவனத்தை கவரமுடியும் என்பதற்காக. ஒரு முறை முன்னாலேயே வந்து அவன் எடுத்து ஒளித்து வைத்துவிட, பெரிய டாக்டர் அவனுக்கு வேறு வேலை கொடுத்து வேறெங்கோ அனுப்பி விட்டார், அவருக்கு தேவையான helmet மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கடும் கோபமடைந்து, அவர் risk எடுக்காமல் junior டாக்டர்களை விட்டு வேலை வாங்கினார்.
Monday, January 5, 2009
ஒரு முறை வெளி நாட்டிலிருந்து இருபது சினை குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது, அதற்கு சிகிச்சை செய்வதற்கு டாக்டர் ராஜிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது, அவருக்கு உதவியாளராக நான் இருந்தேன், பராமரிக்கும் பொறுப்பு "முட்டை" தங்கவேல் வசம் அளிக்கப்பட்டது, அவர்தான் அந்த பிளாக் ஜமேதார், அதில பல குதிரைகள் சரியாக உணவு உண்ணவில்லை, பருவ நிலை மாற்றம், தீனி மாற்றம் என பல காரணங்களால் எல்லாவற்றுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம். அதில் ஒரு குதிரை உண்ணாவிரதம் போல் எது கொடுத்தாலும் உண்ணாமல் அடம் பிடித்தது. அதற்கு ரத்தக்குழாய் மூலம் குளுகோஸ் மற்றும் சத்துக்கள் செலுத்தப்பட்டது, Hivit எனப்படும் multi-vitamin மருந்தும் செலுத்தப்பட்டது, முதல் நாள் ஒன்றும் ஆக வில்லை, அடுத்த நாள் அந்த மருந்தை செலுத்தியபோது குதிரைக்கு shock ஏற்பட்டு சில நொடிகளில் இறந்து விட்டது. எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது, அப்போது பெரிய டாக்டர் அங்கு இல்லை, முட்டை தங்கவேல் புலம்பி தள்ளி விட்டார், பெரிய டாக்டர் வந்தால் என்னை வீட்டுக்கு அனுப்பிடுவார், என்ன செய்வது இப்படி ஆயிடுச்சே என புலம்பிக்கொண்டே இருந்தார், பெரிய டாக்டர் உம் வந்து விட்டார், அவர் முகத்தை பார்த்தாலே தெரிகிறது அவர் கடும் கோபத்தில் இருக்கிறார் என்று. யாரும் எதிர் பாராத விதமாக முட்டை தங்கவேல் "ஐயா, போயிடுச்சே, என்று தரையில் புரண்டு மிக சத்தமாக, மார்பில் அடித்துக்கொண்டு பலமாக ஒப்பாரி வைத்து அழ தொடக்கி விட்டார், அவருடைய இந்த செயல் பெரிய டாக்டர்-ஐ அப்படியே அதிர்ச்சி அடைய செய்து சிலை யாக்கி விட்டது. அவரால் கோபத்தை வெளிப்படுத்த முடிய வில்லை, மாறாக தங்கவேலுக்கு சமாதானம் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். எவ்வளவு பெரிய துன்பத்தையும் நேராக சந்திப்பது எப்படி என்பதை தங்கவேளுவிடமிருந்து எல்லோரும் கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது இந்த சம்பவம்.
Subscribe to:
Comments (Atom)
