Friday, January 23, 2009

பீல்ட் மென் சுப்பிரமணி அவருடைய சைக்கிளில் டாக்டர் "கா.சு.மணியன்" என எழுதி வைத்திருப்பார், அதைப்பார்த்தால் பெரிய டாக்டர் க்கு மிக கோபம் வரும். பீல்ட் மென் சித்த மருத்துவத்தில் கொஞ்சம் அனுபவம் உள்ளவர் அதனால், அனுபவ சித்த மருத்துவர்கள் சங்கத்தில் உறுப்பினர், அவர்கள் சங்க கூட்டம் மாதம் ஒரு முறை நடைபெறும், அதற்கு வரும் அழைப்பு கடிதத்தில் அவருடைய பெயருக்கு முன் டாக்டர் என போட்டிருப்பது பெரிய டாக்டரை எரிச்சல் படுத்தும். ஆனால் இதை எல்லாம் பீல்ட் மென் கண்டு கொள்ள மாட்டார். அவருடைய (விதண்டா)வாதம் என்னவென்றால் குதிரைகளுக்கு பெரிய டாக்டர் போல, பண்ணையிலுள்ள மரங்களுக்கெல்லாம் அவர்தான் டாக்டர் ,ஏனென்றால் அவர்தானே உரம், பூச்சி மருந்து கொடுக்கிறார். ஆகவே ரெண்டு பெரும் சமம் என்பது அவர் நினைப்பு.

No comments: