Wednesday, December 31, 2008
Sunday, December 28, 2008
Wednesday, December 24, 2008
Monday, December 22, 2008
Sunday, December 21, 2008
Saturday, December 20, 2008
அழகுமுருகனுக்கும் கணேசனுக்கும் இளம் வழுக்கை உண்டு. அதை பற்றி இருவருமே பெரும் கவலை கொள்வார்கள். Foltene என்னும் விலை உயர்ந்த மருந்தை உபயோகப்படுத்துவார்கள். இது மட்டுமல்லாமல் பல உத்திகளையும் கையாள்வார்கள். டாம்ப்கோல் எனப்படும் சித்த மருந்துவ எண்ணெயும் உபயோகப்படுத்துவார்கள். ஒரு முறை இரவு நேரத்தில் நான் எங்கள் கிளினிக் உள் செல்ல நேர்ந்தது. அப்போது உள்ளே உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது. நடுவிலே டாக்டர் கணேசன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் தலையில் சிவப்பு நிற ஒலி வட்டம் தெரிந்தது, திடீர் என அவருக்கும் ஞானோதயம் பிறது விட்டதோ எண்ணி அவர் அருகில் சென்று என்னவென்று பார்த்தேன், அவர் பின்னால் சின்னையா நின்று கொண்டு INFRA RED LAMP ஐ அவர் தலையில் படும் படி பிடித்திருந்தான். நான் அவரிடம் இது என்ன சிகிச்சை என்று கேட்டேன். அவர், தம்பி நான் டாம்ப்கோல் தலையில் தடவி உள்ளேன், மருந்து உள்ளே செல்ல வேண்டுமென்றால் ரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும் அதற்குதான் இந்த விளக்கை பிடிக்க சொன்னேன் என்றார். பாத்து செய்யுங்க வேர் சுத்தமா பொசுங்கி விடப்போகுது. அப்பறம் முதலுக்கே மோசமாகி விடும் என்றேன். மற்றொரு முறை அவர் என்னிடம், தம்பி ஆஸ்திரேலியாவில் வழுக்கை தலைக்கு புதிதாக ஒரு சிகிச்சை கண்டு பிடித்திருக்கிறார்கள் , அதில் வைக்கோலை நன்றாக அரைத்து வழுக்கை தலையில் தடவி விடுவார்கள், பின்னர் ஒரு மாட்டை விட்டு அந்த வைக்கோலை நக்க விடுவார்கள். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி முடி முளைக்கும் என்று கூறினார், ஆனால் நான் அதை இங்கு இருக்கும் குதிரை குட்டியை விட்டு செய்யலாம் என்று நினைக்கிறேன் , உன்னோட யோசனையை சொல் என்றார். அண்ணாச்சி இது ரிஸ்கான முயற்சி, மாட்டுக்கு மேல் தாடையில் பல் இருக்காது, அதனால் கடிக்க முடியாது, அனால் குதிரைக்கு கத்திபோல கூர்மையான முன் பற்கள் உண்டு, அப்புறம் தோலோட எடுத்துடுச்சினா ஏதோ கொஞ்சம் நஞ்சம் இருக்குறதும் காலியாகிவிடும் என்று எச்சரித்தேன்.
Friday, December 19, 2008
Thursday, December 18, 2008
Wednesday, December 17, 2008
Sunday, December 14, 2008
பண்ணையில் வேலை செய்தவர்களில் வெங்கட்ராமன் ஒரு interesting character பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறு விதமாகவும் நடந்து கொள்வார். பகலில் எவ்வளவுக்கெவ்வளவு நல்லவரோ இரவில் தலை கீழாக மாறி விடுவார். பகலில் அவரை யாரவது திட்டிவிட்டாலோ சண்டையிட்டாலோ ஒன்றும் எதிர்த்து பேச மாட்டார், ஆனால் இரவில் அவர்களின் பைக் பெட்ரோல் டாங்கியில் தண்ணீர், அல்லது சிறுநீர் கலந்து விடுவார். ஒரு முறை டாக்டர் சச்சிதானந்தம் அவரை திட்டி விட்டார் என்பதற்காக அவருடைய ஷூக்குள் குண்டூசிகளை குத்தி, சிறுநீர் கழித்து வைத்திருந்தார். அது தெரியாமல் அடுத்த நாள் காலை டாக்டர் சச்சிதானந்தம் ஷூக்குள் காலை நுழைத்து காயப்பட்டார். மற்றொரு முறை டாக்டர் கணேசன் அவரை திட்டி விட்டதற்காக அவருடைய பைக் பெட்ரோல் டாங்கியில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டார். இது தெரியாமல் டாக்டர் காலையில் ஒரு மணி நேரம் நாக்கு வெளியே தள்ள உதைத்தும் ஸ்டார்ட் ஆக வில்லை.
Saturday, December 13, 2008
ஜால்ரா அடிப்பதில் எனக்கும் அழகுமுருகனுக்கும் எப்போதும் ஒரு சிறிய போட்டி இருந்து கொண்டே இருக்கும். இது பலமுறை குதிரை குட்டிகள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும்போது நன்றாகவே எதிரொலிக்கும். பெரிய டாக்டர் ஏதாவது குதிரை உடல் நிலை சரியில்லை என்றால் பெரும்பாலும் எங்கள் இருவரில் யாரிடமாவதுதான் கேட்பார், ஏனென்றால் டாக்டர் ராஜ் உண்மையை, எந்த தயவு தாட்சண்யமும் இன்றி நேரடியாக கூறி விடுவார். நாங்கள் கொஞ்சம் அதை மழுப்பி கூறுவோம். ஒரு முறை குட்டி ஒன்று கொஞ்சம் சீரியஸ் நிலைமையில் இருந்தது, என்னிடம் அதன் நிலை பற்றி கேட்டார், நான் முன்னைக்கு இப்ப பரவாயில்லை என்று கூறி சமாளித்தேன். அழகுமுருகன் இடமும் கேட்டார், அவனும் நான் சொன்னதையே கூறினான். உடனே நீங்கள் எப்படி அது இப்போது பரவாயில்லை என்று கூறுகிறீர்கள் என்று அவர் கேட்டார். முன்னைக்கு இப்ப வாலாட்டும் விகிதம் அதிகமாகி உள்ளது என்று கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினான். ஏனென்றால், குதிரையின் உடல் நிலையை அறிய இதய துடிப்பு, நாடி துடிப்பு, உடல் வெப்பம், என பல அறிகுறிகள் உள்ளபோது புதிதாக வாலாட்டும் விகிதத்தை அவன் கண்டு பிடிதுல்லானே என்பதுதான்.
Friday, December 12, 2008
Thursday, December 11, 2008
Wednesday, December 10, 2008
Tuesday, December 9, 2008
சின்ன டாக்டர்களுக்குள் அவ்வப்போது சில ஈகோ மோதல்கள் வருவதுண்டு , புதிதாக சேர்ந்த புதிதில் எல்லோருக்கும் ஆர்வக்கோளாறு அதிகமாகவே இருக்கும், அப்படிதான் அழகுமுருகன் என்ற என்னைவிட ஒரு வருடம் ஜூனியர் டாக்டர் சேர்ந்த புதிதில் ஆர்வக்கோளாறு காரணமாக ரொம்ப தைரியமாக குதிரைக்கு வெகு அருகில் சென்று அதை கையாண்டு கொண்டிருந்தார், நான் அவரிடம் சில முறைகள் எடுத்து சொல்லிப்பார்த்தேன், அவர் என்னமோ நான் அவருடைய முன்னேற்றத்தில் தடை போடுவதாக எண்ணி அலட்சியமாக பேசினார் , நானும் அதன் பிறகு அவருக்கு எடுத்து கூறுவதை நிறுத்திக்கொண்டேன். ஒரு முறை அவர் தன்னுடடைய தாடையை ஒரு குதிரையின் மூக்கின் மேல் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தார் அதைப்பார்த்த நான் அவரிடம் சொல்ல வாயெடுத்து பின்னர் அடக்கிகொண்டேன் நமக்கேன் வம்பென்று. குதிரை சடாரென்று தலையை மேலே தூக்க அவருடைய முன்பற்களில் ஒன்று பாதி உடைந்து சிதறியது. சிறுது நேரத்திற்கு பின் அவரிடம் என் மன ஓட்டத்தில் நான் எண்ணியதை அவரிடம் கூறினேன் . இரண்டு நாட்களுக்கு என்னிடம் முகம் கொடுத்து அவர் பேச வில்லை.
புலம்பல்கள் தொடரும்
