Wednesday, December 17, 2008
புதிதாக ஒரு குதிரை குட்டி போட்டால் பலருக்கும் ஆர்வத்தை கிளப்புவதாக அமைந்து விடும். ஆனால் ஜூனியர் டாக்டர் களைப்பொருத்தவரை தலைவலிதான். ஏனென்றால் குட்டிபோட்ட விஷயத்தை முதலாளியிடம்(ஐயா) தெரிவிப்பதற்கு ஒரு பெரும் போட்டியே நடக்கும்(இதில் ஜூனியர் டாக்டர் கள் கிடையாது). பண்ணையின் மேலாளர் அருணாசலம் அவர்தான் முதலில் சொல்ல வேண்டும் என்று நினைப்பார். ஆனால் இரவும் பகலும் கஷ்டப்படுகிறவன் நான்தான், எனவே நான்தான் ஐயாவிடம் சொல்ல வேண்டும் என பெரிய டாக்டர் நினைப்பார். காலை ஆறு மணிக்கு தொலைபேசி அடித்தால் ஜூனியர் டாக்டர் கள் பின்னங்கால் பிடரியில் பட ஓடுவார்கள், ஐயாதான் முன்னாள் இரவு எந்த குதிரை குட்டிப்போட்டது என விசாரிக்க கூப்பிடுவார், சொன்னால் பெரிய டாக்டர்-இன் கோபத்தை சம்பாதிக்க வேண்டும், தெரியாது என்றால் போலிங் அட்டென்ட் செய்யாமல் தூங்கிக்கொண்டு இருந்தாயா என ஐயா கோபப்படுவார். ஏன் வம்பு என போன் எடுக்காமலே இருந்து விடுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment