Saturday, December 13, 2008

எங்களுடன் பனி புரிந்தவர்களில் பீல்ட் மென் சுப்பிரமணி ஒரு முக்கியமான பாத்திரம் என்றே கூறலாம். அவருக்கும் ராமுவுக்கும் அடிக்கடி ஈகோ மோதல்கள் நிகழும், அவை பெரும்பாலும் நகைச்சுவையாகவே இருக்கும். பீல்ட் மென் அவர் திருமணத்திற்காக தீவிர பெண் தேடுதலில் ஈடு பட்டிருந்தார், அவர் பண்ணையில் விவசாய பணியாளர்களின் மேஸ்திரி போன்ற பணியில் இருந்தார், ஆனால் வெளியில் தான் agricultural officer என்று கூறி வந்தார். ஒரு முறை அவர் டாக்டர் சச்சிதானந்தம் அவர்களிடம் வந்து தன்னை பார்க்க பெண் வீட்டார் வருவதாகவும், அவர்கள் வந்து கேட்டால் நீங்கள் அவர்களிடம் நான் இங்கு agricultural officer ஆக பணி புரிவதாக கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அவர்கள் எப்போது வருவார்கள் என்பது அவருக்கும் தெரியாது. ராமுவிடம் அவர்கள் ஆபீஸ் க்கு வந்தால் அவர்களை இங்கேயே உட்கார வைத்து விட்டு நீ வந்து எனக்கு தெரியப்படுத்து நானும் என்னுடைய உடைகளை மாற்றி தயாராக இருப்பேன் என்று கூறி வைத்தார். அடுத்த நாள் காலை எட்டு மணிக்கே அவர்கள் வந்து விட்டார்கல். ராமு அவர்களை நேராக பீல்ட் மேன் பணி செய்யும் பகுதிக்கு அழைத்து சென்று விட்டார், பீல்ட் மேனுக்கு முன்னரே தெரியப்படுத்தவும் இல்லை. அங்கு பீல்ட் மண் ஒரு காக்கி அரைக்கால் டவுசர் மாட்டிக்கொண்டு, வாயில் பீடி புகைய , தலைப்பாகையோடு புள் வெட்டிக்கொண்டு இருந்தார். ராமு பெண் வீட்டு காரர்களிடம், இவன்தான் பீல்ட் மேன் சுப்பிரமணி(தான் அவரைவிட மேல் அதிகாரியாக்கும் என்பது போல்"இவன்தான்" என்பதை கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கூறினார்). பீல்ட் மேன்-இன் கோலத்தை கண்ட பெண் வீட்டுக்காரர்கள் மிகுந்த கோபம் அடைந்து எத்தனை பேரடா இப்படி கிளம்பி இருக்கிறீர்கள் என அவரை அடிக்காத குறையாக திட்டி விட்டு சென்றார்கள்.

No comments: