Wednesday, December 24, 2008
செட்டிநாடு குதிரை பண்ணையில் பல விதமான மூட நம்பிக்கைகள் உண்டு. ஒரு குதிரைக்கு வயித்து வலி வந்து விட்டால் அதற்கு எல்லா மருந்துகளும் கொடுக்கப்பட்ட பின்னரும் சில அறிவியலுக்கு அப்பாற்பட்ட முயற்சிகளும் செய்யப்படும். ஒரு முறை ஒரு ஜூனியர் டாக்டர் வயித்து வலியில் தவித்துக்கொண்டு இருந்த ஒரு குதிரைக்கு வேறு ஒரு மருந்தை தவறுதலாக கொடுத்து விட்டார். அதிர்ஷ்ட வசமாக அந்த குதிரை பிழைத்துக்கொண்டது, அவ்வளவுதான் அதற்குப்பிறகு வயித்து வலியென்றால், அதற்கான மருதுக்குப்பிறகு, சம்பந்தமே இல்லாத மற்றொரு மருந்தும் கொடுக்கப்படும். பல்வேறு விதமான ஊசி மருத்துகள், டிரிப், டியுபின் வழியாக எண்ணெய், எனிமா,இன்ன பிற மருந்து வகைகள் என கால்நடை மருத்துவத்தில் உள்ள சாம பேத தண்ட முறைகளை எல்லாம் கையாண்டாலும்,கற்பூரம் ஏற்றி ஒரு தேங்காய் சுற்றி உடைத்து முடித்தால் தான் நம்மால் முடிந்த எல்லா சிகிச்சைகளும் முடிவடைந்து விட்டது இனி ஆண்டவன் விட்ட வழி என நிம்மதியாக இருக்க முடியும். சில சமயங்களில் அவசரக்காலத்தில் இந்த தேங்காய், பூசணிக்காய் போன்றவை இல்லாது போனால் அவ்வளவுதான் பெரிய டாக்டர் ருத்ரதாண்டவம் ஆடி விடுவார்(ஏதாவது முக்கியமான மருந்து இல்லை என்றால் கூட பொறுத்து கொள்வார், ஆனால் கும்குமம், தேங்காய்,கற்பூரம் இல்லை என்றால் அவ்வளவுதான்.)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment