ஜால்ரா அடிப்பதில் எனக்கும் அழகுமுருகனுக்கும் எப்போதும் ஒரு சிறிய போட்டி இருந்து கொண்டே இருக்கும். இது பலமுறை குதிரை குட்டிகள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும்போது நன்றாகவே எதிரொலிக்கும். பெரிய டாக்டர் ஏதாவது குதிரை உடல் நிலை சரியில்லை என்றால் பெரும்பாலும் எங்கள் இருவரில் யாரிடமாவதுதான் கேட்பார், ஏனென்றால் டாக்டர் ராஜ் உண்மையை, எந்த தயவு தாட்சண்யமும் இன்றி நேரடியாக கூறி விடுவார். நாங்கள் கொஞ்சம் அதை மழுப்பி கூறுவோம். ஒரு முறை குட்டி ஒன்று கொஞ்சம் சீரியஸ் நிலைமையில் இருந்தது, என்னிடம் அதன் நிலை பற்றி கேட்டார், நான் முன்னைக்கு இப்ப பரவாயில்லை என்று கூறி சமாளித்தேன். அழகுமுருகன் இடமும் கேட்டார், அவனும் நான் சொன்னதையே கூறினான். உடனே நீங்கள் எப்படி அது இப்போது பரவாயில்லை என்று கூறுகிறீர்கள் என்று அவர் கேட்டார். முன்னைக்கு இப்ப வாலாட்டும் விகிதம் அதிகமாகி உள்ளது என்று கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினான். ஏனென்றால், குதிரையின் உடல் நிலையை அறிய இதய துடிப்பு, நாடி துடிப்பு, உடல் வெப்பம், என பல அறிகுறிகள் உள்ளபோது புதிதாக வாலாட்டும் விகிதத்தை அவன் கண்டு பிடிதுல்லானே என்பதுதான்.
Saturday, December 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment