Sunday, December 14, 2008

sprinkler சின்னையா உலக அரசியல் முதல் லோக்கல் கிரிகெட் போட்டி வரை விரல் நுனியில் வைத்துக்கொண்டு விவாதம் புரிவதில் மிகுந்த ஈடுபாடு உடையவன். ஒரு முறை சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் போட்டி பார்ப்பதற்காக சென்றான். அதற்க்கு முதல் நாள் இரவு என்னிடம் வந்து சார் எனக்கு மல சிக்கல் உள்ளது அதற்கு நம் பண்ணையில் ஏதாவது மருந்து உள்ளதா என கேட்டான். நானும் அவனுக்கு லிக்விட் பாரபின் நூறு மில்லி கொடுத்து குடிக்க சொன்னேன். அடுத்த நாள் அவன் கிரிகெட் போட்டி பார்க்க செல்வது எனக்கு தெரியாது. அவன் எதிர்பார்த்தது என்ன வென்றால் அடுத்த நாள் விடியல் காலை வயிறு சுத்தமாகி விடும் ,பின்னர் போட்டியின் பொது அவஸ்தையின்றி இருக்கலாம் என்பது. ஆனால் நடந்தது வேறு, நான் கொடுத்த லிகிட் பாரபின் உடலில் எந்த மாற்றமும் அடையாமல் , எந்த வித முன்னறிவிப்புமின்றி அவனுடைய உடலிலிருந்து, சத்தமில்லாமல் வெளியேற ஆரம்பித்து விட்டது, அவன் கிரிகெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவன் பான்ட் முழுவதும் எண்ணெய்க்கரை ஆகி விட்டது. "ஒரே மானக்கேடு ஆகிடுச்சி சார், நல்ல வேலை எண்ணெய் மட்டும் வந்தது" என என்னிடம் வந்து புலம்பி தள்ளினான்.

No comments: