Monday, December 22, 2008
சில சமயங்களில் எதற்கு ஆமாம் சொல்கின்றோம் என்பதே தெரியாமல் ஆமாம் என்று கூறி விடுவோம், பல முறை நான் அதை பெரிய டாக்டர் இடம் செய்திருக்கிறேன். என்ன செய்வது ஊரோடு ஒத்து வாழ வேண்டுமே. இதனால் எனக்கும் டாக்டர் ராஜ் க்கும் இடையே சில சமயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுண்டு. ஒரு முறை புதிதாக பிறந்த குட்டி ஒன்று சரியாக எழுந்து நிற்க முடியாமல் இருந்தது. பெரிய டாக்டர் என்னை அழைத்து அந்த குட்டிக்கு மாவு கட்டு போடுமாறு கூறினார். நானும் கண்ணை மூடிக்கொண்டு அவருடைய உத்தரவை நிறைவேற்றினேன். டாக்டர் ராஜ் என்னிடம் கடும் கோபமடைந்து, அந்த குட்டி எழுந்திரிக்கவே திராணியற்று உள்ளது, எப்படி நீ மாவு கட்டு போடலாம் என கேட்டார், நானும் அவரிடம் முட்டாள் தனமாக பெரிய டாக்டர் தான் என்னுடை பாஸ் அவர் சொன்னதை செய்ய வேண்டியது மட்டும் தான் என் வேலை என்று சற்று கோபமாக கூறிவிட்டேன், பின்னர் என் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டேன். இப்படி சில சமயங்களில் எங்களுக்குள் சில உரசல்கள் எழுந்தாலும் எங்கள் ஐந்து பேருக்குள்ளும் ஒரு நல்ல புரிதல் இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment