Friday, December 12, 2008

போட்டு கொடுப்பதில் ராமு வின் வழியே தனி . டாக்டர் பிஸியாக இருக்கும்போது வருவார், பெரிய டாக்டர் அவரிடம் என்ன ராமு எதாவது விஷயமா என்பார். ஒண்ணுமில்லை சார் சும்மா வந்தேன் என்பார். அதுவே எதோ விஷயம், இருக்கிறது என்பதற்கு அறிகுறி. பெரிய டாக்டர் வேலை முடியும் வரை பொறுமையாக இருப்பார். பின்னர் லேசாக ," சார் முட்ட தங்கவேல் என்று ஆரம்பித்து கொஞ்சம் கேப் விடுவார். பெரிய டாக்டரின் ஆர்வத்தை இது தூண்டும், எதோ விஷயம் உள்ளது என்று. சும்மா சொல்லு ராமு என்ன விஷயம் , இல்ல சார் நீங்க பிஸி யாக இருக்கீங்க , உங்க மூட் கெடுக்க வேண்டாம், என்று பார்கிறேன் என்பார். அவ்வளவுதான் பெரிய டாக்டர் தலை வெடித்துவிடும் போல் ஆகி விடுவார். பரவாயில்லை சொல்லு ராமு என்று அவர் நான்கு ஐந்து முறை சொன்ன பிறகே கோல் மூடும் வேலையை தொடங்குவார், இப்படி செய்வதால் maximum impact இருக்கும்.

No comments: