Thursday, December 11, 2008
காக்காய் பிடிப்பது ஒரு கலை அது எல்லாருக்கும் அவ்வளவு விரைவில் வந்து விடாது, அதே போல் எல்லா நேரத்திலும் உதவிடாது. அதில் சில சம்பவங்கள் என்னை ஈர்த்தவை, நானே போட்டுக்கொடுக்கப்பட்டிருந்தாலும் பல என்னை வியக்க வைத்தவை. ஒரு முறை பண்ணையில் பணிபுரியும் பணியாளர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடந்தது, அதில் என் தலைமையில் ஒரு அணியும் டாக்டர் புவனகுமார் (பெரிய டாக்டர்) தலைமையில் ஒரு அணியும் கிரிக்கெட் போட்டியில் போட்டியிட்டோம். நான் பேட்டிங் செய்து கொண்டிருந்தேன், பெரிய டாக்டர் ஸ்லிப் திசையில் நின்று பீல்டிங் செய்து கொண்டிருந்தார், அவருடைய தலைமை ஜால்ராவான நடராஜன் விக்கெட் கீபெராக நின்று கொண்டிருந்தான், பெரிய டாக்டர் நின்று கொண்டிருப்பதை காண சகிக்காத அவன், அவரருகில் சென்று "ஐயா நிற்கிறீர்களே நாற்காலி போடவா, உட்கார்ந்து கொண்டு பீல்ட் செய்யுங்களேன்" என்று கூறினான். பெரிய டாக்டரின் முகத்தில் வெட்கம் பிடுங்கி தின்றது, நான் வேறு காதில் விழும் தூரத்தில் நின்று கொண்டிருந்தேன். டாக்டரின் ரெண்டாம் நம்பர் ஜால்ராவான் ராமு பற்றி பிறகு பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment