Wednesday, December 17, 2008
புதுக்கோட்டை அருணாசலம் என்பவர் எங்கள் பண்ணையில் பணிபுரிந்தார்(அவர் என்ன பணியில் இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது ஏனென்றால் அவர் எந்த வேலையும் செய்து நான் பார்த்ததில்லை, பெரும்பாலும் தினத்தந்தி படித்துக்கொண்டு இருப்பார்), அவரை எல்லோரும் புதுக்கோட்டையார் என்று அழைப்பார்கள். பண்ணையில் விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு வழங்குவதற்காக எப்போதும் ஒரு பாட்டில் ஸ்காட்ச் விஸ்கி வைத்திருப்பார்கள், ஒரு முறை அதை பரிமாறுவதற்காக எடுத்த பொது அதன் கலர் கிட்டத்தட்ட தண்ணீர் நிறத்தில் இருப்பதை ப்பார்த்து டாக்டர் சச்சிதானந்தம் அவருடைய விசாரணையை தொடங்கினார். புலன் விசாரணையில் பல உண்மைகள் வெளி வந்தது. இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருந்த புதுக்கோட்டையார் தினமும் இரவில் அந்த பாட்டிலில் இருந்து கொஞ்சம் குடித்து விட்டு அதற்கு சம அளவு தண்ணீர் ஊற்றி வைத்துள்ளார், நாளாக நாளாக விஸ்கி தண்ணீராக மாறி விட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment