Monday, December 8, 2008
என்னதான் படித்து கல்லூரியில் பழம் தின்று கொட்டை போட்டு வந்தாலும் அனுபவம் நமக்கு பல பாடங்களை கற்ப்பிக்கும். படிக்கும் காலத்தில் குதிரை படுக்காது என்றே நாம் பயிற்றுவிக்கப்படுகிறோம், ஆனால் நன்றாக படுத்து சில குதிரைகள் குறட்டை விட்டு தூங்கி மற்ற குதிரைகளின் தூக்கத்தை கெடுக்கும் என்பதுதான் உண்மை. நான் வேளையில் சேர்ந்த புதிதில் பெரிய டாக்டரின் அறிவுரையின் பேரில் ரௌண்ட்ஸ் சென்றேன். அப்போது ஒரு குதிரை வசதியாக காலை பரப்பிக்கொண்டு தூங்குவதை கண்டு பதறியடித்து மீசை தங்கவேலுவிடம் அந்த குதிரையை கவனிக்குமாறு கூறினேன். அவர் சர்வ சாதாரணமாக அது அப்படிதான் பிறந்ததுலேருந்து இருக்கு என்று நக்கல் கலந்த தொனியில் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment