Friday, December 19, 2008

நாங்கள் அனைவரும் ஒன்டிக்கட்டைகளாக இருந்ததால் எங்கள் அனைவருக்கும் தனித்தனி அறைகள்தான். நான் தங்கி இருந்த கட்டிடத்தில் இன்னொரு அறையில் ராமு,முரளி மற்றும் முத்துராமன் தங்கியிருந்தார்கள், தினமும் இரவு பன்னிரண்டு மணி வரை அனைவரும், கதையடித்துக்கொண்டு இருப்போம். சில நேரங்களில் பீல்ட் மென் சுப்ரமணியும் எங்களுடன் கலந்து கொள்வார். அவர் வந்து விட்டால் எங்களுக்கு ஓட்டுவதற்கு அருமையான ஆள் கிடைத்து விட்டார் என்றே அர்த்தம். ஒரு முறை நள்ளிரவில் திடீர் என்று என் ரூம் கதவை முத்துராமன் வேர்க்க விறு விறு க்க தட்டினார், நான் என்னவோ எதோ என்று அலறியடித்து எழுந்தேன். இரவில் எதோ தன்னை அழுதியதாகவும், அவரால் குரலை கூட எழுப்ப முடிய வில்லை என்றும் என்னிடம் கூறினார், நான் அவரிடம் முரளி அல்லது ராமு தூக்கத்தில் உங்கள் மேல் கால் போட்டு இருப்பார்கள் என்று சமாதானப்படுத்தினேன். ரூமில் வேறு யாரும் இல்லை, மற்றவர்கள் அனைவரும் வெளியே சென்று விட்டார்கள், தான் மட்டும்தான் இருப்பதாகவும் அவர் கூறினார். அன்று இரவு அவர் என்னுடைய ரூமிலே உறங்கினார். அடுத்த நாள் பீல்ட் மென் அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு முன் யாரோ ஒரு aal இறந்து விட்டதாகவும் அந்த ஆவி muththuraamanai amukki இருக்கலாம் என்று கதை விட்டார்,மற்றவர்களுக்கு இது தெரிந்தவுடன், அந்த அறையே பக்தி பழமாக மாறி விட்டது. ராமுவின் கட்டிலில் தலை மாட்டில் ஐயப்பன் படம், கால் மாட்டில் பிள்ளையார் படம், மெத்தைக்கடியில் விபூதி, ரூமின் சுவர் எங்கும் சாமிப்படம் என எதோ சினிமாவில் வரும் சாமியார் அறை ரேஞ்சுக்கு அந்த இடமே மாறி விட்டது.

No comments: