Sunday, December 28, 2008

ஒரு முறை காலை ஆறு மணிக்கே பீல்ட் மென் என்னை தேடி வந்தார், எப்போதுமில்லாத வழக்கமாக நம்மை தேடி வந்துள்ளாரே என்ன விஷயம் என்று அவரிடம் வினவினேன். சார் டாக்டர்-க்கு படிக்க எவ்வளவு செலவாகும் என கேட்டார், எந்த டாக்டர் பீல்ட் மனிதர்களுக்கா, விளங்குகளுக்கா என அவரிடம் கேட்டேன், அவர் மனிதர்களுக்குத்தான் சார் என்றார், அரசு மருத்துவக்கல்லூரி என்றால் ஐந்து வருடத்திற்கு சுமாராக இரண்டு லட்சம் ஆகலாம், தனியார் என்றால் சுமார் இருபது ஐந்து லட்சம் முதல் முப்பது லட்சம் வரை செலவாகலாம் என்றேன். அதற்க்கு அவர் அரசு க்கல்லூரிதான் சரிப்பட்டு வரும் என்றார். இவர் என்ன சம்பந்தமே இல்லாமல் சொல்கிறாரே என எண்ணிக்கொண்டே அவரிடம், பீல்ட் நீங்கள் இந்த வயதிற்கு மேல் எல்லாம் மருதுவக்கல்லுரியில் சேர முடியாது என்று கூறினேன், உடனே அவர் எனக்கில்லை சார், நேற்று எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, அவன் ஜாதகத்தை கணித்தேன், ஜாதகப்படி அவன் டாக்டர் ஆவான் என்றுள்ளது அது தான் செலவு எவ்வளவு ஆகும் என்று உங்களிடம் விசாரித்தேன் என்றார். எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.

No comments: