சின்ன டாக்டர்களுக்குள் அவ்வப்போது சில ஈகோ மோதல்கள் வருவதுண்டு , புதிதாக சேர்ந்த புதிதில் எல்லோருக்கும் ஆர்வக்கோளாறு அதிகமாகவே இருக்கும், அப்படிதான் அழகுமுருகன் என்ற என்னைவிட ஒரு வருடம் ஜூனியர் டாக்டர் சேர்ந்த புதிதில் ஆர்வக்கோளாறு காரணமாக ரொம்ப தைரியமாக குதிரைக்கு வெகு அருகில் சென்று அதை கையாண்டு கொண்டிருந்தார், நான் அவரிடம் சில முறைகள் எடுத்து சொல்லிப்பார்த்தேன், அவர் என்னமோ நான் அவருடைய முன்னேற்றத்தில் தடை போடுவதாக எண்ணி அலட்சியமாக பேசினார் , நானும் அதன் பிறகு அவருக்கு எடுத்து கூறுவதை நிறுத்திக்கொண்டேன். ஒரு முறை அவர் தன்னுடடைய தாடையை ஒரு குதிரையின் மூக்கின் மேல் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தார் அதைப்பார்த்த நான் அவரிடம் சொல்ல வாயெடுத்து பின்னர் அடக்கிகொண்டேன் நமக்கேன் வம்பென்று. குதிரை சடாரென்று தலையை மேலே தூக்க அவருடைய முன்பற்களில் ஒன்று பாதி உடைந்து சிதறியது. சிறுது நேரத்திற்கு பின் அவரிடம் என் மன ஓட்டத்தில் நான் எண்ணியதை அவரிடம் கூறினேன் . இரண்டு நாட்களுக்கு என்னிடம் முகம் கொடுத்து அவர் பேச வில்லை.
புலம்பல்கள் தொடரும்

No comments:
Post a Comment