Sunday, December 14, 2008

பண்ணையில் வேலை செய்தவர்களில் வெங்கட்ராமன் ஒரு interesting character பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறு விதமாகவும் நடந்து கொள்வார். பகலில் எவ்வளவுக்கெவ்வளவு நல்லவரோ இரவில் தலை கீழாக மாறி விடுவார். பகலில் அவரை யாரவது திட்டிவிட்டாலோ சண்டையிட்டாலோ ஒன்றும் எதிர்த்து பேச மாட்டார், ஆனால் இரவில் அவர்களின் பைக் பெட்ரோல் டாங்கியில் தண்ணீர், அல்லது சிறுநீர் கலந்து விடுவார். ஒரு முறை டாக்டர் சச்சிதானந்தம் அவரை திட்டி விட்டார் என்பதற்காக அவருடைய ஷூக்குள் குண்டூசிகளை குத்தி, சிறுநீர் கழித்து வைத்திருந்தார். அது தெரியாமல் அடுத்த நாள் காலை டாக்டர் சச்சிதானந்தம் ஷூக்குள் காலை நுழைத்து காயப்பட்டார். மற்றொரு முறை டாக்டர் கணேசன் அவரை திட்டி விட்டதற்காக அவருடைய பைக் பெட்ரோல் டாங்கியில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டார். இது தெரியாமல் டாக்டர் காலையில் ஒரு மணி நேரம் நாக்கு வெளியே தள்ள உதைத்தும் ஸ்டார்ட் ஆக வில்லை.

No comments: