Saturday, December 13, 2008
காலை உணவருந்திய பின்னர் செய்தித்தாள் படிக்கும் நேரத்தில் சில சமயம் எங்களுக்குள் வாக்குவாதங்கள் நிகழ்வதுண்டு. சில சமயங்களில் எனக்கும் அழகுமுருகனுக்கும் ஜோசியம் பற்றி விவாதங்கள் நடக்கும், நான் அப்போது ஜோசியத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்தேன், ஆனால் அவனோ மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தான். நான் அவனிடம் எல்லா ராசிக்கும் பலன்கள் ஒரே மாதிரிதான் எழுதுகிறார்கள், வார்த்தைகளை மாற்றிப்போட்டுல்லார்கள் என்று விவாதித்து கொண்டிருந்தேன். அப்போது அவன் அதெல்லாம் கிடையாது நன்றாக பார்த்துதான் எழுத்து கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் பரிசோதித்து பாருங்களேன் என்றான். அப்போது எங்கள் பண்ணையின் டைப்பிஸ்ட் சங்கர நாராயணன் வந்தார், அவருக்கு வயது அறுபதுக்கும் மேல். நான் அவரிடம் அவர் ராசிக்கான பலனை படிக்க சொல்லி கேட்டேன், முதல் வரியிலேயே அவருக்கு காதல் கை கூடும் , திருமண வாய்ப்பு உண்டு என்று இருந்ததை கேட்டு அனைவரும் கொல்லென்று சிறிது விட்டார்கள், அவருக்கு ஒன்றும் புரிய வில்லை. பின்னர் அழகுமுருகன் என்னிடம் எந்த புத்துல என்ன பாம்பு இருக்குன்னு யாருக்கு தெரியும் என்று கூறினான்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment