Friday, December 12, 2008

ஜூனியர் டாக்டர்களில் பெரிய டாக்டர் போல் நடந்துகொள்பவர் என்றால் அது கணேசன் தான். அவர் பெரும்பாலும் இரவுப்பணியில் தான் இருப்பார். அவர் பணிக்கு வரும்போது , தேநீர், சிகரெட் ,தீக்குச்சி, போர்வை மற்றும் தலையணை(இரவுப்பனிக்கு வருபவர்க்கு எதற்கு போர்வை தலையணை என்று கேட்க்கப்படாது). அவருடைய அச்சிச்டன்ட் சின்னையா(sprinkler சின்னையா இன்னொரு சின்னையா உண்டு- கொட்டாய் சின்னையா) எல்லாவற்றையும் தயாராக வைத்திருப்பான். அவர் வந்தவுடன் தம் போடுவதற்கு தீப்பெட்டியை எடுத்து கொடுக்கும் விதமே அலாதியானது. அவர் முன்னாள் நின்று கொண்டு அவருக்கு முதுகை காட்டியவாறு நின்று அவனுடைய பாக்கெட் லிருந்து தீப்பெட்டியை எடுத்து கொடுப்பான் (மரியாதையாம்). ஜூனியர் டாக்டர்கள் அனைவரும் ஒன்டிக்கட்டைகள் என்பதால் வாரத்துக்கு இருமுறையாவது தண்ணிப்பார்ட்டி உண்டு. பார்ட்டி க்கான காரணம் பெரும்பாலும் பிறந்த நாளாக இருக்கலாம், அது யாருடைய பிறந்த நாள் என்பது முக்கியம் அல்ல,(உதாரணத்திற்கு டாக்டர் களில் ஒருவருக்கோ, ஏதாவது அரசியல் தலைவருக்கோ அல்லது எதுமே இல்லை என்றால் வீட்டில் கன்னுக்குட்டி போட்டதுக்க்காகவாவது இருக்கலாம், சில சமயம் புது சட்டை எடுத்ததுக்காக கூட நடந்தது உண்டு ). தண்ணி பெரும்பாலும் ஜின் தான் இருக்கும் ஏனென்றால் அதுதான் நாற்றம் அடிக்காது. மற்றவை காட்டிக்கொடுத்துவிடும். சிலர் அது வருங்கால சந்ததி பெருக்கத்தை பாதிக்கும் என்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லைபோதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு சந்ததிகளை பெருக்கி உள்ளோம்.

No comments: