Thursday, December 18, 2008
யாராவது விருந்தினர்கள் பண்ணைக்கு வந்து சென்றால், அவர்கள் வெளியில் சென்ற புழுதி அடங்குவதற்குள் திருஷ்டி பூசணிக்காய் அல்லது தேங்காய் உடைக்கப்பட்டு விடும், ஐயாவே வந்து சென்றால் கூட திருஷ்டி பூசணிக்காய் உடைக்கப்படும். வாரம் தவறாமல் செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றுவது என்பது ஒரு தவிர்க்க முடியாத நடைமுறையாகி விட்டது, இதற்கிடையில் முட்டை தங்கவேலு வேறு அவருக்கு கோழிக்கறி சாப்பிட வேண்டும் என்று தோணும் போதெல்லாம், பெரிய டாக்டர்-இடம் வந்து ஐயா ரத்தபலி குடுத்தா நல்லா இருக்கும், குதிரைக்கு வயித்து வலி வர்றது அதிகமாயிடிச்சி என லைட்டாக தூபம் போடுவார். பெரிய டாக்டர்-ம எதற்கு வம்பு என்று ஒரு கோழி அடித்து சாமி கும்பிட சொல்லுவார். இந்த நடைமுறைகளால் பண்ணைக்கான பூசணி,தேங்காய் ஆகியவற்றின் தேவை அதிகரித்து, இதற்காகவே பூசணி விவசாயம் தொடங்கப்பட்டு அதுவும் உற்பத்தி செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment