Sunday, December 21, 2008
ராஜன் ரொம்ப சுத்தம் பார்ப்பவன். நாங்கள் எல்லாம் காபியில் ஈ இருந்தால் தூக்கிப்போட்டு விட்டு குடித்து விடுவோம், டம்ளர் விளிம்பில் ஈ உட்கார்ந்து எழுந்து போனால் கூட அவன் அந்த காப்பியை கீழே ஊத்தி விடுவான். பார்பர் கடைக்கு சென்றால், அங்கு அவன் செய்யும் கூத்து தமாஷாக இருக்கும். அங்கே மேலே போடப்படும் துணியை போர்த்திக்கொள்ள மாட்டான், கத்திரிக்கோல் அவன் முன்னாள் சுத்தமாக கிருமி நாசினியில் சுத்தப்படுத்தப்பட வேண்டும், அவன் முன்னால்தான் பிளேடு மாற்றப்பட வேண்டும் என பல கண்டிஷன்கள் போடுவான். சீப்பு அவனே எடுத்து செல்வான். அங்கே இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை மட்டுமே எவ்வித மாற்றமும் இல்லாமல் உபயோகிப்பான். அவனிடம் ஒரு முறை நான்," எல்லாம் சரி ஒரு முறையாவது நீ நம்முடைய மெஸ் க்குள் சென்று பார்துல்லாயா, ஒரு முறை சென்று பார் அப்புறம் இந்த சுத்தம் பார்க்கும் முறையை விட்டு விடுவாய்" என்றேன். அவனும் ஒருமுறை சென்று பார்த்தான், பிறகு என்னிடம் "சரியாக தான் சொன்னீர்கள் இனி மெஸ்-க்குள் செல்லவே கூடாது ,வியாதி வந்து விடும்" என்றான்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment